Wednesday, January 12, 2011

என்ன தான் சொன்னாலும் நீ என்னோடு நிலைப்பதில்லை
என்னிலை என்னவானாலும் நீங்காமல் நிலைப்பாய் என்று சொன்ன நீ
என்ன தான் சொன்னாலும் நிலையேன் என்று சொன்னாய்

சற்றே சலனமில்லாமல் சென்றன ஆண்டுகள்
நிலையற்ற என் உருவமும் உன் உருவமும்
சிரித்து கொண்டன நீங்கி போனதைப் பார்த்து

சொல்லாமல் கொன்றாய் உன் சிரிப்பொன்றில்
சொல்லியும் கொன்றாய் அது சலிப்பு என்றாய்
சுதந்திரம் நிலையானதா? சொல்லிப்பார் சுதிந்திரமே சுற்றி திரிவது தான்


நிலையற்ற வாழ்வில் நிலைக்க நீ நினைக்க வில்லையோ?
நிலையற்று போயின என் நினைவுகள்
என்ன தான் சொன்னாலும் நீ என்னோடு நிலைப்பதில்லை

Sunday, January 2, 2011

விசித்திர வர்கங்கள்

என்று தொடங்கினோம்
சொல்ல முடியுமா அறிதலை
தாயறிந்து பால் கேட்ட பொழுதா
சுவை அறிந்து தேன் கேட்ட பொழுதா
ஏதேதோ சிந்தனை தூக்கம் தந்த பொழுதா
கலைந்த ஓர் நாள் கனவின் பின்
நரம்பு வேகமாய் துடித்ததே அன்றா?

திக்கென்ற அழகை பார்த்து வேகமாய் துடித்து
எலும்பு கூட்டை தட்டிய இதயம் சொன்னதா

அறிவேன் அறிவேன் என்று சொன்ன போதும்
ஆராய பழக்கப்பட்ட அறிவு ஆராய்ந்து கொண்டே இருக்கிறதே
எவ்வளவு அறிந்தாலும் ஊற்றாய் கேள்விகள்
விடை தேடி ஓய்ந்த கண்கள் சுருங்கிப் பார்த்தன
தன் மகனின் மகனான
அறியா சிறுவனின் வாழ்க்கைத் தேடலை
காற்றாடிக்கும் அதை பிடித்திருக்கும் கைக்கும்
இருக்கும் அந்த பொட்டு போல் தொட்டிருக்கும்
உறவு தான் அம்மா
தொலைவில் நீயோ நானோ இருந்தாலும்
உன் பிடிப்பையே நம்பி பறக்கிறேன்
என் அசைவுகளெல்லாம் நீ உணர்வாய்
நான் வெறும் காற்றாடி காற்றுக்கு அசையும் காகிதம்
இப்பொழுது பறந்தாலும் புதையும் நாள் கீழே
உன்னிடம் தான் ...